search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்தது தேசியவாத காங்கிரஸ் கட்சி
    X

    கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்தது தேசியவாத காங்கிரஸ் கட்சி

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
    மும்பை :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த பாட்டீல் கூறுகையில், வெள்ள பாதிப்புக்கு இலக்கான கேரளா மாநிலத்துக்கு கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசு கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
    Next Story
    ×