search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
    X

    பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை கடந்த மாதம் 17-ம் தேதி துவங்கியது. சுமார் 3 வாரங்கள் வரை நடந்த இந்த கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கான தனது இறுதி உரையை வழங்கிய வெங்கையா நாயுடு, இந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தொடர் மிகவும் உபயோகமாக அமைந்ததாக தெரிவித்தார். முந்தைய பட்ஜெட் கூட்டத்தொடரை விட 3 மடங்கு உபயோகமாக அமைந்துள்ளதாக தனது உரையில் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதற்கு அவை உறுப்பினர்கள் மட்டுமே காரணம் எனவும் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.

    வெங்கையா நாயுடுவின் உரையை தொடர்ந்து மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha
    Next Story
    ×