search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.7 லட்சமாக உயர்வு- பீகார் அரசு உத்தரவு
    X

    ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.7 லட்சமாக உயர்வு- பீகார் அரசு உத்தரவு

    கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தி வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. #Bihar
    பாட்னா:

    ஒருதலைக் காதல், காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், கொலை செய்ய முயற்சிப்பதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, மனம் தளராமல் வாழ்பவர்களுக்கு பீகார் அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், தற்போது இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 லட்ச ரூபாய் இனி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்கும் குறைவானவர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான 7 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக 50 சதவிகிதம் அதாவது, 10.5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
    Next Story
    ×