என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலநிலை மாற்றம் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் - உலக வங்கி அதிர்ச்சி தகவல்
Byமாலை மலர்29 Jun 2018 7:22 AM GMT (Updated: 29 Jun 2018 7:22 AM GMT)
உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் வெப்பநிலை மற்றும் மழை உட்பட அனைத்து காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உலக வங்கியானது தெற்காசிய ஹாட்ஸ்பாட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெப்பநிலை உயர்வு மற்றும் பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை தரத்தை பாதிக்குமா என்பதை அறிய எடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் 2050 ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள பாதி பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறையும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் வெப்பநிலை 2050-ம் ஆண்டிற்குள் 1-2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக வங்கியானது தெற்காசிய ஹாட்ஸ்பாட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெப்பநிலை உயர்வு மற்றும் பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை தரத்தை பாதிக்குமா என்பதை அறிய எடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் 2050 ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள பாதி பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறையும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாறுவதால் விவசாயம் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பே வாழ்க்கை தரம் குறைவதற்கு காரணம். குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாழ்க்கை தரம் 9 சதவீதம் குறையும். இந்த மாற்றத்தால் சுமார் 600 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம். இதனால் தெற்காசியாவில் சீரற்றநிலை மற்றும் வறுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X