search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலதாமதம் இன்றி ஓய்வூதியம் வழங்க தனி நிறுவனம் தொடங்க கேரள அரசு முடிவு
    X

    காலதாமதம் இன்றி ஓய்வூதியம் வழங்க தனி நிறுவனம் தொடங்க கேரள அரசு முடிவு

    முதியோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத்தை கால தாமதம் இன்றி வழங்க தனி நிறுவனம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #Keralagovernment #SpecialCompanyForPension
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும், பணி ஓய்வு பெற்றவர்கள், முதியோர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல பிரிவினருக்கும் ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியங்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் பயனாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    பல்வேறு காரணங்களினால் மாதாமாதம் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், பண்டிகை நாட்களில் மட்டும் என வழங்கப்படும் நிலை உள்ளது.



    இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியத்தை மாதம் தோறும் தவறாமல் வழங்குவதற்கு என புதிய நிறுவனம் ஒன்றை நிதித்துறையின் கீழ் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியம் வழங்கப்படும் அவல நிலை மாறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிறுவனமானது முழுவதுமாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த முடிவால் ஓய்வூதியத்தை ஆதாரமாக கொண்டு வாழும் பல்வேறு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #Keralagovernment #SpecialCompanyForPension
    Next Story
    ×