search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடாரியின் கைப்பிடி மூலம் புலியின் பிடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பிய கிராமவாசி
    X

    கோடாரியின் கைப்பிடி மூலம் புலியின் பிடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பிய கிராமவாசி

    மத்திய பிரதேசம் மாநிலம் பந்தவ்கர் புலிகள் காப்பக வனச்சரகத்தில், கிராமவாசி ஒருவர் தன்னை தாக்கிய புலியின் வாயில் கோடாரியின் கைப்பிடியை நுழைத்து சாமர்த்தியமாக தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் பர்பஸ்பூர் பகுதியில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பக வனச்சரகத்தில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை சேகரிப்பதற்காக கிராமவாசிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது, ராகேஷ் பாய்கா என்பவரை புலி ஒன்று தாக்கியது.

    புலியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தன் கையிலிருந்த கோடாரியின் கைப்பிடி பகுதியை புலியின் வாயில் வைத்து, புலி தன்னை கடித்து விடாமல் பாதுகாத்துக் கொண்டுள்ளார். ராகேஷின் அலறலை கேட்ட இதர கிராமவாசிகள் அங்கு வந்து புலியை விரட்டியுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து வனச்சரக அதிகாரி விஜய் சங்கர் கூறுகையில், புலியின் தாக்குதலினால் தாடையில் முறிவு ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் ராகேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×