
கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 3 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு வேட்பாளர்களை நிறுத்தியது.
ஹானூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணு குமார், பெங்களூர் காந்திநகர் தொகுதியில் யுவராஜ், கோலார் தங்கவயல் தொகுதியில் எம்.அன்பு ஆகியோர் காங்கிரஸ்,பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டனர்.
கர்நாடகத்தில் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவிலை. இதனால் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிட்டனர்.
இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் இந்த 3 தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். #KarnatakaElection2018 #ADMK