search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிசிடிவி பொருத்தும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை - கவர்னர் மாளிகையை நோக்கி கெஜ்ரிவால் பேரணி
    X

    சிசிடிவி பொருத்தும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை - கவர்னர் மாளிகையை நோக்கி கெஜ்ரிவால் பேரணி

    சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி துணை நிலை கவர்னரின், நடவடிக்கையை கண்டித்து அவரது இல்லத்தை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.ஏ.க்களுடன் பேரணி சென்றுள்ளார். #AamAadmi #arvindkejriwal #cctvcamera #pmmodi
    புது டெல்லி:

    பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற கண்காணிப்புக்காக பொதுஇடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்தை டெல்லி அரசு அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் இருந்து வந்தார். இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இருப்பினும், துணை நிலை கவர்னரின் செயல்பாட்டை கண்டித்து அவரது இல்லம் நோக்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரணி  செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேரணி நடத்தி வருகிறார்.

    இந்த பேரணியில் ஆத்மி கட்சியினர் துணைநிலை கவர்னர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பங்கேற்றுள்ளனர். முதல்வரின் இல்லத்தில் இருந்து  இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #AamAadmi #arvindkejriwal #cctvcamera #pmmodi
    Next Story
    ×