search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் பெண்கள் பெட்டிகளை புதிய நிறத்தில் நடுப்பகுதிக்கு மாற்ற திட்டம்
    X

    ரெயிலில் பெண்கள் பெட்டிகளை புதிய நிறத்தில் நடுப்பகுதிக்கு மாற்ற திட்டம்

    ரெயில்களில் பெண்கள் பெட்டியை, புதிய நிறத்தில் நடுப்பகுதிக்கு மாற்றவும், அதில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #Railways #WomenCoaches

    புதுடெல்லி: 

    ரெயில்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோகானி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை ரெயில்வேயிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் பல்வேறு மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ரெயில்களில் பெண்களுக்கான பெட்டி கடைசியில் இருப்பதால் அவசரக் காலங்களில் உடனடியாக உதவி கிடைக்காமல் போகிறது. இதனால் பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற வேண்டும். பெண்கள் பெட்டிகளில் மட்டும், அவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களை அமைக்கலாம். பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காணும் வகையில், ரெயில் பெட்டிகளின் மற்றவற்றின் நிறத்தில் இருந்து இதற்கு வேறுபட்ட நிறத்தை பூசலாம். நீண்ட தூர மற்றும் புறநகர் ரெயில்கள் என அனைத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளது. 

    இந்த பரிந்துரைகள், அனைத்து மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பரிந்துரைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Railways #WomenCoaches
    Next Story
    ×