என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திரா சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை
Byமாலை மலர்4 May 2018 10:20 AM GMT (Updated: 4 May 2018 10:20 AM GMT)
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#andhrarape
ஐதராபாத்:
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரிக்சா டிரைவர் சுப்பையா நேற்று கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 போலீசார் கொண்ட சிறப்பு படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ. யேரபதினி ஸ்ரீவசா ராவ் 2.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை யு.எஸ்.ஆர்.சி.பி. எம்எல்ஏ ரோஜா மற்றும் மாநில துணை முதல் மந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதற்கிடையில், தலைமறைவாக உள்ள சுப்பையா தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் கிருஷ்ணா ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் ஆற்றில் தேடி வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத உடல் ஒன்று ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
அது குற்றவாளி உடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுப்பையா அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #andhrarape
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரிக்சா டிரைவர் சுப்பையா நேற்று கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 போலீசார் கொண்ட சிறப்பு படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ. யேரபதினி ஸ்ரீவசா ராவ் 2.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை யு.எஸ்.ஆர்.சி.பி. எம்எல்ஏ ரோஜா மற்றும் மாநில துணை முதல் மந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதற்கிடையில், தலைமறைவாக உள்ள சுப்பையா தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் கிருஷ்ணா ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் ஆற்றில் தேடி வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத உடல் ஒன்று ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
அது குற்றவாளி உடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுப்பையா அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #andhrarape
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X