என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க கர்நாடகாவில் 7-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
Byமாலை மலர்2 March 2018 6:00 AM GMT (Updated: 2 March 2018 6:00 AM GMT)
காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக கர்நாடக மாநிலத்தில் வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. #Cauveryverdict #Karnataka #Allpartymeeting
பெங்களூரு:
காவிரி நதிநீர் வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு தண்ணீரின் அளவை குறைத்தது. காவிரி நதி யாருக்கும் சொந்தம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்த நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த பிரதமரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே, கர்நாடக மாநிலத்திலும் முதல் மந்திரி சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்தார். அதன்படி, வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என இன்று அறிவித்துள்ளார். இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Karnataka #Cauveryverdict #Allpartymeeting #Siddaramaiah #tamilnews
காவிரி நதிநீர் வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு தண்ணீரின் அளவை குறைத்தது. காவிரி நதி யாருக்கும் சொந்தம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்த நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த பிரதமரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே, கர்நாடக மாநிலத்திலும் முதல் மந்திரி சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்தார். அதன்படி, வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என இன்று அறிவித்துள்ளார். இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Karnataka #Cauveryverdict #Allpartymeeting #Siddaramaiah #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X