search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிறைவு பெற்றது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: இருஅவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
    X

    நிறைவு பெற்றது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: இருஅவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது மற்றும் கடைசி பகுதி நிறைவு பெற்றுள்ளது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 

    இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பாராளுமன்ற 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்தது. இதனையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    கடைசி நாளான இன்று மக்களவையில் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அமளி காரணமாக அவை நடவடிக்கை 8 மணி நேரம் 12 நிமிடங்கள் வீணான போதும், 48 மணி நேரம் கூடுதலாக அவை நடைபெற்றது என்றார்.



    அதேபோல், மாநிலங்களவையில் சுமார் 136 மணி நேரதிதில் 14 மசோதாக்கள் விவாதிக்கப்பட்டதாக சபாநாயகர் அன்சாரி தெரிவித்தார்.

    கடைசி நாளான இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.11 லட்சம் பரிசு என்று பா.ஜ.க. யுவ மோர்சா அமைப்பு தலைவர் கூறிய விவகாரம் எதிரொலித்தது.
    Next Story
    ×