என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்
Byமாலை மலர்28 Jan 2017 5:14 AM GMT (Updated: 28 Jan 2017 5:14 AM GMT)
பெங்களூருவில் பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு மாநகரில், வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் பலூன் வியாபாரி ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு, பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டரையும் வைத்து, தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்றார்.
இந்நிலையில், வசந்த நகர் 8-வது குறுக்கு தெருவில் அவர் சென்றபோது, வண்டியில் இருந்த சிலிண்டர் சூடானதால், டூவீலரை ஓரமாக நிறுத்தி, சிலிண்டர் மீது தண்ணீர் தெளித்தார். அப்போது திடீரென்று, சிலிண்டர் வெடித்தது. இதில், முகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பெளரிங் ஆஸ்பத்திரிக்கு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், அருகில் இருந்த மருந்து கடை உரிமையாளர் யுவராஜ், கடைக்கு வந்திருந்த லட்சுமிதேவம்மா என்ற பெண் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற அம்முஸ்ரீ என்ற பெண் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்கள் மகாவீர் ஜெயின் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு மாநகரில், வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் பலூன் வியாபாரி ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு, பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டரையும் வைத்து, தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்றார்.
இந்நிலையில், வசந்த நகர் 8-வது குறுக்கு தெருவில் அவர் சென்றபோது, வண்டியில் இருந்த சிலிண்டர் சூடானதால், டூவீலரை ஓரமாக நிறுத்தி, சிலிண்டர் மீது தண்ணீர் தெளித்தார். அப்போது திடீரென்று, சிலிண்டர் வெடித்தது. இதில், முகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பெளரிங் ஆஸ்பத்திரிக்கு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், அருகில் இருந்த மருந்து கடை உரிமையாளர் யுவராஜ், கடைக்கு வந்திருந்த லட்சுமிதேவம்மா என்ற பெண் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற அம்முஸ்ரீ என்ற பெண் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்கள் மகாவீர் ஜெயின் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X