என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Byமாலை மலர்5 Jan 2017 1:42 PM GMT (Updated: 5 Jan 2017 1:42 PM GMT)
ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை மற்றும் மானாவரி பயிர்கள் கருகிவிட்டது. அதனை கண்ட பல விவசாயிகள் மன வேதனை அடைந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊடகங்களிலும் விவசாயிகள் தற்கொலை குறித்து தீவிரமான விவாதமும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தொடர்ந்து நிகழும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து தமிழக செயலாளர் 6 வாரங்களுக்கு பதிலளிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு தாமாக முன் வந்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை மற்றும் மானாவரி பயிர்கள் கருகிவிட்டது. அதனை கண்ட பல விவசாயிகள் மன வேதனை அடைந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊடகங்களிலும் விவசாயிகள் தற்கொலை குறித்து தீவிரமான விவாதமும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தொடர்ந்து நிகழும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து தமிழக செயலாளர் 6 வாரங்களுக்கு பதிலளிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு தாமாக முன் வந்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X