என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடைபாதை பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட அனுமதி சீட்டு வழங்க ஆலோசனை
Byமாலை மலர்6 Nov 2016 5:39 AM GMT (Updated: 6 Nov 2016 5:39 AM GMT)
திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது நடைபாதை பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட அனுமதி சீட்டு வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வருகின்றனர்.
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திவ்ய தரிசன பக்தர்கள் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் திருமலைக்கு வருகின்றனர். திவ்ய தரிசனத்துக்கு 20 மணிநேரமும், இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரமும் வரிசைகளில் காத்திருக்கின்றனர். இதனால், பக்தர்கள் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள், ‘டைம் ஸ்லாட்’ முறையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், பாத யாத்திரையாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திவ்ய தரிசன அனுமதி சீட்டில் தரிசன நேரம் குறிப்பிடப்பட உள்ளது. இது, ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட உள்ளது. நேரம் குறிப்பிடப்பட்ட திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வருகின்றனர்.
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திவ்ய தரிசன பக்தர்கள் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் திருமலைக்கு வருகின்றனர். திவ்ய தரிசனத்துக்கு 20 மணிநேரமும், இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரமும் வரிசைகளில் காத்திருக்கின்றனர். இதனால், பக்தர்கள் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள், ‘டைம் ஸ்லாட்’ முறையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், பாத யாத்திரையாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திவ்ய தரிசன அனுமதி சீட்டில் தரிசன நேரம் குறிப்பிடப்பட உள்ளது. இது, ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட உள்ளது. நேரம் குறிப்பிடப்பட்ட திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X