என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏழை நோயாளிகளுக்கு உதவும் பெண் போலீசுக்கு பேஸ்புக்கில் 7 லட்சம் பாலோவர்கள்
Byமாலை மலர்4 Nov 2016 12:32 PM GMT (Updated: 4 Nov 2016 12:32 PM GMT)
ஏழை நோயாளிகளுக்கு பேஸ்புக் மூலம் நிதியுதவி பெற்று உதவும் பெண் போலீஸ் ஸ்மிதா சாண்டியை பேஸ்புக்கில் பின்தோடர்வோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
சத்தீஸ்கர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஸ்மிதா சாண்டி மற்றவர்களைப் போல பேஸ்புக்கில் புகைப்படம் பதிவிடுவது, அரட்டையடிப்பது என இல்லாமல் ஏழை நோயாளிகளுக்கு உதவும் ஒரு தளமாக பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து ஏழை நோயாளிகளுக்கு உதவ குரூப் ஒன்றை ஆரம்பித்த சாண்டி இந்த இரண்டு வருடங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து ஸ்மிதா கூறுகையில் "ஆரம்பத்தில் எனது கோரிக்கைகளை ஏற்று உதவ யாரும் முன்வரவில்லை. ஆனால் ஒரு மாதத்திற்குப் பின் எனது பதிவுகளைப் பார்த்து உதவிகள் வர ஆரம்பித்தன. உதவி கேட்டு வருபவர்களை நானே நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு உண்மையிலேயே சிகிச்சை தேவையா? என கண்டறிந்து பேஸ்புக்கில் பதிவிடுகிறேன். எனது இந்த செயலில் நம்பிக்கை வைத்து ஏராளமான பேர் உதவி வருகிறார்கள்" என தெரிவித்திருக்கிறார்.
ஸ்மிதாவின் தந்தை சிவகுமார் சிகிச்சை செய்ய வசதியின்றி இறந்து போனதே ஸ்மிதாவின் உதவி மனப்பான்மைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஸ்மிதா சாண்டி மற்றவர்களைப் போல பேஸ்புக்கில் புகைப்படம் பதிவிடுவது, அரட்டையடிப்பது என இல்லாமல் ஏழை நோயாளிகளுக்கு உதவும் ஒரு தளமாக பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து ஏழை நோயாளிகளுக்கு உதவ குரூப் ஒன்றை ஆரம்பித்த சாண்டி இந்த இரண்டு வருடங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து ஸ்மிதா கூறுகையில் "ஆரம்பத்தில் எனது கோரிக்கைகளை ஏற்று உதவ யாரும் முன்வரவில்லை. ஆனால் ஒரு மாதத்திற்குப் பின் எனது பதிவுகளைப் பார்த்து உதவிகள் வர ஆரம்பித்தன. உதவி கேட்டு வருபவர்களை நானே நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு உண்மையிலேயே சிகிச்சை தேவையா? என கண்டறிந்து பேஸ்புக்கில் பதிவிடுகிறேன். எனது இந்த செயலில் நம்பிக்கை வைத்து ஏராளமான பேர் உதவி வருகிறார்கள்" என தெரிவித்திருக்கிறார்.
ஸ்மிதாவின் தந்தை சிவகுமார் சிகிச்சை செய்ய வசதியின்றி இறந்து போனதே ஸ்மிதாவின் உதவி மனப்பான்மைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X