search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் மட்டுமே நீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு
    X

    கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் மட்டுமே நீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு

    கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் மட்டுமே நீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 1–ந் தேதியில் இருந்து 6–ந் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (செப்டம்பர்) 30–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    அனைத்துக்கட்சி கூட்டத்தின் போது ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடக்கூடாது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உறுப்பினரை நியமனம் செய்யக்கூடாது என்று அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூறினார்கள்.

    பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தின் போது காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க மறுபடியும் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று கூடியது.

    இந்த சிறப்பு பேரவை கூட்டத்தில்  27 டி.எம்.சி நீரை குடிநீர் தேவைக்காக பயன்படுத்த வேண்டும் என்று சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 27.டி.எம்.சி நீரை தவிர மீதமுள்ள நீரை விவசாயம் இதர தேவைக்காக பயன்படுத்தலாம்  என்று ஒரு மனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்காக மட்டுமே நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் கர்நாடக அணைகளில் இருந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே நீர் திறக்கப்படும் என்று செப்டம்பர் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செயய்ப்பட்டு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கும் வகையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமலேயே பேரவை கூட்டம் முடிவுக்கு வந்தது. கர்நடக மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு முடிவு எடுக்கும் என்றும் இன்று நள்ளிரவு முதல் குடிநீர் மற்றும் கர்நாடக விவசாயத்திற்கும் தண்னீர் திறக்கப்படும் என்று பேரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக மாநில நீர் வளத்துறை மந்திரி எம்.பி பாட்டீல் தெரிவித்தார்.  

    கர்நாடக மாநில காவிரி டெல்டா விவசாய அமைப்புகள்,  நீர்வளம், மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளுடன் கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி எம்.பி பாடீல் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
    Next Story
    ×