search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோவின் வெற்றிப்பயணம் தொடரும்:தலைவர் கிரண்குமார் பேட்டி
    X

    இஸ்ரோவின் வெற்றிப்பயணம் தொடரும்:தலைவர் கிரண்குமார் பேட்டி

    இஸ்ரோவின் வெற்றிப்பயணம் தொடரும் என்று இஸ்ரோ நிறுவனத்தலைவர் கிரண்குமார் பேட்டியளித்துள்ளார்.
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது.

    இந்த செயற்கை கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் மூலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

    இந்த ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்ட்டவுன், நேற்று காலை 11.10 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் தொடங்கிய நிமிடத்தில் இருந்து ராக்கெட்டின் செயல்பாடுகள், வானிலை நிலவரம் உள்ளிட்ட அம்சங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்தனர்.

    இந்நிலையில், எரிபொருட்கள் நிரப்புவதில் தாமதம் ஆனதால் ராக்கெட்டை செலுத்துவது 40 நிமிடங்கள தாமதம் ஆனது. 4.50 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்தது. அதற்கேற்ப கவுண்ட்டவுன் மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும் கவுண்ட்டவுன் தொடங்கியது.

    கவுண்ட்டவுன் முடிந்து சரியாக 4.50 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. அதன் பாதையை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் 230 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

    ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  

    அப்போது அவர் கூறியதாவது:-

    'செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

    உள்நாட்டில் தயாரான மூன்றாவது ஜிஎஸ்எல்வி மாக் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி மாக் 3 டிசம்பர் அல்லது ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்.டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை இஸ்ரோவே கணிக்கும் முறை விரைவில் வரும்.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
     

    Next Story
    ×