search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள்: பிரதமர் மோடி
    X

    ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள்: பிரதமர் மோடி

    ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள், சில பேர் தான் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    அலிராஜ்பூர்:

    மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் இன்று நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “மற்ற பகுதிகளில் இருக்கும் இந்தியர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும். காஷ்மீரில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.   

    ஆனால் லேப்டாப்பும், கிரிக்கெட் பேட்டும் வைத்திருக்க வேண்டிய பள்ளி மாணவர்களின் கையில் கற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் வளர்ச்சிகாக மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளது. அங்குள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் வாஜ்பாயின் மனிதநேயம், மக்களாட்சி, காஷ்மீர்வாதம் என்ற கொள்கைகளை தான் பின்பற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×