என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமீர்கான் பற்றிய என்னுடைய விமர்சனத்தை பலர் பாராட்டினார்கள்: மனோகர் பாரிக்கர்
Byமாலை மலர்6 Aug 2016 11:22 PM GMT (Updated: 6 Aug 2016 11:22 PM GMT)
தேசப்பற்று விவகாரத்தில் அமீர்கான் பற்றிய தன்னுடைய விமர்சனத்தை நிறைய பேர் பாராட்டியுள்ளார்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் அமீர்கான் கூறியதை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் சில தினங்களுக்கு முன்பு விமர்சித்தார். மேலும், நாட்டுக்கு எதிராக பேசுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனையடுத்து மனோகர் பாரிக்கரின் கருத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமீர்கான் பற்றிய தன்னுடைய விமர்சனத்தை நிறைய பேர் பாராட்டியுள்ளார்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பாரிக்கர் கூறியதாவது:-
தேச எதிர்ப்பாளர்களிடம் கொஞ்சம் அனுதாபம் இருக்கிறது. புனேவில் சொன்னதை நான் திரும்பி சொல்ல விரும்பவில்லை. அதனை பார்க்க விரும்புவர்கள் யு-டூப்பில் பார்த்துக் கொள்ளட்டும். நான் தவறாக கருத்து சொல்லிவிட்டதாக இதுவரை என்னிடம் யாரும் சொல்லவில்லை. எல்லோரும் நான் சரியான கருத்தினை தெரிவித்துள்ளதாகவே பாராட்டுகின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X