search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
    X

    ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

    • இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
    • தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தாராசுரம் ரயில்வே கேட் அருகே திருச்சியில்இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயில் சென்று கொண்டி ருந்தது அப்போது திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, அரித்துவாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (24) தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில், ரயில் வந்து கொண்டிருக்கும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அப்போது எதிர்பாரா விதமாக இக்காட்சியை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இதை பார்ப்பவர்கள் கல் நெஞ்சையும் பதை பதைக்க செய்கிறது.

    தகவலறிந்த இரும்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரும்புபாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு மாத்திகேட் பகுதியில் ஐடி துறையில் பணியாற்றும் கோபிநாத் (28) என்ற இளைஞர் ரயிலில் சிக்கி பலியான நிலையில் மற்றொரு இளைஞரும் பலியானதால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×