என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டீ வியாபாரியை கத்தியால் வெட்டி கொள்ளை முயற்சி- வாலிபர் கைது
- 2 வாலிபர்கள் தனுசை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.
- தலையில் வெட்டுபட்டு படுகாயமடைந்த தனுஷ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போரூர்:
நெற்குன்றம் முனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தனுஷ் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் இரவு கோயம்பேடு மார்க்கெட் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தனுசை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தலையில் வெட்டுபட்டு படுகாயமடைந்த தனுஷ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரஜிஸ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த துரைமுருகன் (25) என்பவரை கைது செய்தனர். அவனிடம் இருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது தப்பி ஓடிய அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்