search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரத்தில் பாம்பு கடித்து வாலிபர் சாவு
    X

    ராதாபுரத்தில் பாம்பு கடித்து வாலிபர் சாவு

    • இரவு தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது அவரை பாம்பு கடித்தது.
    • இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் அரசர்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவரது மகன் திணேஷ்(வயது 26).

    இவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது அவரை பாம்பு கடித்தது.

    உடனே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவர் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். ஆஸ்பத்திரிக்கு அருகில் சென்றபோது மயங்கிவிழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×