என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போடி அருகே சுற்றுலா சென்று வந்தவர் திடீர் சாவு
Byமாலை மலர்20 Jun 2022 4:12 AM GMT
- சிறுமலைக்கு சுற்றுலா சென்று வந்தவர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே திருமலாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் சசிக்குமார்(27). இவர் தனது நண்பர்களுடன் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தபின்னர் அவர்கள் மாலை வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது சசிக்குமார் முதுகு வலிப்பதாக கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சசிக்குமாரை போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சசிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இறந்த நபருக்கு ஏற்கனவே அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.
எனவே குளிர்ச்சியான சூழலுக்கு சென்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X