என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உத்தமபாளையத்தில் கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்ட முயற்சி
- பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்ட நடந்த முயற்சியில் வெட்டுக் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உத்தமபாளையம் :
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் சுரேஷ்குமார் (வயது 33). இவர் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பி.டி.ஆர். சாலை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை பின்தொடர்ந்து ேமாட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவரை வழிமறித்து கீழேதள்ளி கத்தி மற்றும் அரிவாளால் தாக்கினர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவரவே அவர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து உத்தம–பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் தப்பி ஓடியவர்கள் 2 பேரும் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் சுரேஷ்குமாரை தீர்த்துக் கட்ட வந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்