search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் இளம்பெண் மாயம்
    X

    மேலப்பாளையத்தில் இளம்பெண் மாயம்

    • மாயமான இளம்பெண் அழகப்பா பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பல்கலைகழக அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முத்து ராகவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    நெல்லை:

    மேலப்பாளையம் பாண்டிதுரை 1-வது தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகள் முத்து ராகவி(வயது 20).

    இவர் அழகப்பா பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று முருகன்குறிச்சியில் உள்ள அழகப்பா பல்கலைகழக அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முத்து ராகவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக சுடலைமுத்து மேலப்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து ராகவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×