search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு நூலகத்தில் குழந்தைகளுக்கான யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    யோகா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அரசு நூலகத்தில் குழந்தைகளுக்கான யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • லியோ கேஜி மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் குழந்தைகளுக்கான யோகா குறித்து விழிப்புணர்வு நடைப்பெற்றது.
    • குழந்தைகளுக்கு யோகா குறித்து முக்கியத்துவத்தையும், அதன் பயன்களையும் விளக்கி பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக யோகாதினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூ ண்டி லியோ கேஜி மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் குழந்தைகளுக்கான யோகா குறித்து விழிப்புணர்வு நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர்வழக்கறி ஞர்நா கராஜன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத் தலைவர் துரை ராயப்பன் வரவே ற்றார். வாசகர் வட்ட துணைச்செயலாளர் கமல் நன்றி கூறினார். பறவைகள் ஆர்வலர் அரிமா. வேதமணி குழந்தை களை வாழ்த்திப் பேசினார். யோகா பயிற்று னர் ஹரி குழந்தை களுக்கு யோகா குறித்து முக்கியத்துவத்தையும், அதன் பயன்களையும் விளக்கி பேசினார்.

    சிறுவர் வாசகர் வட்ட தலைவர் அஸ்வின், செயலா ளர் முத்து நிவாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுரேஷ், மாணவர்கள் பூமிநாதன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை நூலகர் ஆசைத்தம்பி செய்திருந்தார்.

    Next Story
    ×