search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
    X

     உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி.

    உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

    • குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி பேரணியாக சென்றனர்.
    • இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் அர. சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் அர. சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் செவிலியர்கள், நர்சுகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி பேரணியாக சென்றனர். செல்லும் வழியில் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×