என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பட்டுக்கோட்டையில், உலக வீடற்றோர் தினம் கொண்டாட்டம்
- முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ ஆலோசனை மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- முகாமில் தங்கியிருந்த 10 முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:
உலக வீடற்றோர் தினத்தினை முன்னிட்டு, பட்டுக்கோட்டை நகராட்சி மூலம் அண்ணாநகரில் செயல்பட்டு வரும் வீடற்றோர் இல்லத்தில் உலக வீடற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா, நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ், நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடற்றோர் இல்லத்தில் தங்கி இருக்கும் 10 முதியவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், நகர்நல மருத்துவமனை மருத்துவர் பானுப்பிரியா மற்றும் பணியாளர்களால் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு உடன் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.பின்னர் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன் எடுத்துக் கூறினார். மேலும் கவுன்சிலர் சதாசிவக்குமார் சிறப்புரையாற்றினார்.
முகாமில் தங்கியிருந்த 10 முதியவர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டது.
இசை நாற்காலி விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற முதல் இரண்டு நபர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பத்துணர்ச்சி ஆலோசனையும் வழங்கப்பட்டது.
விழாவில் கவுன்சிலர்கள் ராயல்குமார், நாடிமுத்து, சதாசிவகுமார், காமராஜ், குமணன், ஜெயராமன், சரேஷ், முத்துசாமி, கலையரசி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், அழகேசன், சமூக ஆர்வலர்கள் மணிமுத்து, நகராட்சி உதவிப்பொறியாளர் தியாகராஜன், துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்பரவு ஆய்வாளர்.
ஆரோக்கியசாமி, துப்புர வுபணி மேற்பார்வையாளர் செல்வகுமார், சமுதாய அமை ப்பாளர் பிரவீணா, பரப்புரை பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்