search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடி அருகே கார் மோதி தொழிலாளி பலி
    X

    பணகுடி அருகே கார் மோதி தொழிலாளி பலி

    • தெற்கு வள்ளியூர் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றுள்ளார்
    • பணகுடி போலீசார் வழக்குப்பதிவுசெய்து லாசர் என்பவரை கைது செய்தனர்.

    நெல்லை:

    களக்காட்டை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 43). டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு தெற்கு வள்ளியூர் பகுதிக்கு சென்றுள்ளார்.

    அவர் தெற்கு வள்ளியூர் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவராஜை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவுசெய்து வள்ளியூரை சேர்ந்த கார் டிரைவரான லாசர்(53) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×