search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே வீட்டில் பீடி சுற்றிய பெண் திடீர் சாவு
    X

    செங்கோட்டை அருகே வீட்டில் பீடி சுற்றிய பெண் திடீர் சாவு

    • இரவு பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பீடி சுற்றிக்கொண்டிருந்த குணசீலா திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த வல்லம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி குணசீலா(வயது 39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    முருகேசன் அப்பகுதியில் உள்ள மரஅறுவை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். குணசீலா நேற்று முன்தினம் லாலாகுடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இரவு பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பீடி சுற்றிக்கொண்டிருந்த குணசீலா திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

    உடனே அவரை செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பலாப்பழம் சாப்பிட்டதால் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×