என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் நகை பறிப்பு
- இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை 2 பெண்கள் சட்டென்று பறித்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
அரித்துவாரமங்கலத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி இன்று காலை பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே பஸ் வந்தபோது பெண் பயணி ஒருவரின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை 2 பெண்கள் சட்டென்று பறித்தனர்.
இதனை அறிந்து அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மற்ற பயணிகள் 2 பெண்களையும் பிடித்து பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் அவர்களை தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை எம்.ஜி.ஆர் . நகரை சேர்ந்த மணிகண்டன் மனைவி தேவயானி (வயது 25 ) , அதே பகுதியை சேர்ந்த மாரி மனைவி முத்து (25 ) என்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவயானி, முத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்