search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அருகே பெண் கொலை  கைதான கணவர் பரபரப்பு வாக்கு மூலம்
    X

    ஆத்தூர் அருகே பெண் கொலை கைதான கணவர் பரபரப்பு வாக்கு மூலம்

    • அகல்யாவின் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
    • சொத்தில் பங்கு வாங்கி வராததால் கம்பியால் அடித்து கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி ஊராட்சி கரிகாலன் குட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 34), கம்ப்ரசர் டிராக்டர் மூலம் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

    2-வது திருமணம்

    இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தை சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். 2 மாதங்களுக்கு முன்பு அகல்யாவின் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

    அந்த நிலத்தை விற்பனை செய்தால் அதற்குரிய பங்கு தொகை கேட்டு வாங்கி வரும் படி அகல்யாவிடம் மணிகண்டன் கூறினார். இது தொடர்பாக கடந்த மாதம் 14-ந் தேதி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்கு வாதமாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கினார். இதில் காயம் அடைந்த அகல்யா வீட்டில் இருந்தார்.

    தகவல் அறிந்த அவரது பெற்றோர் அகல்யாவை மீட்டு கடந்த மாதம் 17-ந் தேதி துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    பரபரப்பு வாக்குமூலம்

    இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாவது, மனைவியின் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு ஏற்கனவே கூறி வந்தேன், இந்த நிலையில் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பதை அறிந்த நான் அதில் பங்கு தொகையை வாங்கி வரும் படி கூறினேன்.

    ஆனால் அதற்கும் மறுத்த அவர் என்னிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைக்க போலீசார்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×