search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விபத்தில் பெண் பலி
    X

    கோவையில் விபத்தில் பெண் பலி

    • மோட்டார் சைக்கிள் வாகராயம்பாளையம்- குரும்பபாளையம் ரோட்டில் சென்ற போது வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை :

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 57). சம்பவத்தன்று இவர் தனது மகனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் வாகராயம்பாளையம்- குரும்பபாளையம் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×