என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாகன மோதி பெண் பலி, டிரைவர் காயம்
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வாகன மோதி பெண் பலியனார்.
- இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் சுந்தரி (வயது 56.) தனியார் கல்லூரி கேண்டீன் தொழிலாளி. இவர் நேற்று இரவு கல்லூரியில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக குமார பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த காங்கயத்தை சேர்ந்த பேக்காரி தொழிலாளி பழனி(29) என்பவரை கைது செய்தனர்.
குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 39.) டிரைவர். இவர் மொபட்டில் குமாரபாளையம் நோக்கி வந்தார். அப்போது, எதிரே வேகமாக வந்த கார் இவரது வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பலத்த காயமடைந்த பழனிசாமி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்