என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதியம்புத்தூரில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்29 Jun 2022 9:05 AM GMT
- சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பொன்மணி கண்டித்துள்ளார்.
- மனமுடைந்த பொன்மணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் சோனியா நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது44). சமையல் மாஸ்டர். இவர் பொன்மணி (33) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சிவசங்கர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இதை பொன்மணி கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த பொன்மணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பொன்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X