search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதியம்புத்தூரில் காதல் திருமணம் செய்த பெண்  தீக்குளித்து தற்கொலை
    X

    புதியம்புத்தூரில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை

    • சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பொன்மணி கண்டித்துள்ளார்.
    • மனமுடைந்த பொன்மணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் சோனியா நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது44). சமையல் மாஸ்டர். இவர் பொன்மணி (33) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சிவசங்கர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    இதை பொன்மணி கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் மனமுடைந்த பொன்மணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பொன்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×