search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை அருகே தோட்டத்து வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
    X

    யானைகள் சேதப்படுத்திய வீட்டை படத்தில் காணலாம்.

    பெரும்பாறை அருகே தோட்டத்து வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்

    • திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரை சுற்றியுள்ள வனப்பகுதியில் சிலநாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
    • காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக்காடு, நேர்மலை கடைசி கூட்டுக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    அவை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் பெரும்பாறை அருகே சோலைக்காட்டை சேர்ந்த விவசாயியான பூதப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் யானைகள் புகுந்தன. அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, பாக்கு மரம் போன்ற வற்றை நாசம் செய்தன. மேலும் அங்கிருந்த தோட்டத்து வீட்டை சூறையாடி சேதப்படுத்தின.

    இதனையடுத்து அதிகாலையில் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இதற்கிடையே பூதபாண்டி தனது தோட்டத்திற்கு வந்தபோது வீடு மற்றும் பயிர்கள் நாசமாகி இருந்ததை பார்த்து வேதனை அடைந்தார்.

    காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆடலூர், சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×