என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்காணத்தில் மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்
- நேற்று பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அழகு முத்து மதிய வேளையில் பள்ளியிலிருந்து சென்றுவிட்டார்.
- எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
விழுப்புரம்:
மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் இவரது மனைவி அழகு முத்து (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அழகு முத்து மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அழகு முத்து மதிய வேளையில் பள்ளியிலிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து பள்ளி முடிந்த பின்னர் அழகு முத்துவின் கணவர் உதயகுமார் அவரை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்தார்.
அப்போது பள்ளியில் இருந்தவர்கள் அழகு முத்து மதியமே பள்ளியில் இருந்து சென்று விட்டார் என்று கூறினார். உடனே உதயகுமார் தனது மனைவி அழகு முத்துவை அக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து உதயகுமார் மரக்காணம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். புகாரின் பெரில் மரக்கணம் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு முத்து எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்