என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் திருவிளக்கு பூஜை
- புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
புளியங்குடி:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானியம்மன், நாககன்னியம்மன், நாகம்மன் கோவிலில் மாதந்திர விளக்கு பூஜை நடைபெற்றது.
அதன்படி வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரோனா முழுவதும் அழிந்து போகவும், சிறப்பு மந்திரங்களும் சிறப்பு பூஜைகளும் இரவு 7 மணிக்கு 508 சிறப்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி திருவிளக்கில் தீபமேற்றி பூஜை நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு பால், மஞ்சள், தயிர், குங்குமம் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
பின் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்