என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ெரயில்வே பாலம் கீழ் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
- 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
- ஆபத்தான முறையில் ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் கடந்த சுமார் 7ஆண்டுகளுக்கு முன்பு ெரயில்வே கீழ் பாலம் கட்டப்பட்டது.
இந்த ெரயில்வே கீழ் பாலம் வழியாக குடியாத்தம் நகருக்கு இப்பகுதியில் உள்ள மேல் ஆலத்தூர், கூடநகரம், அணங்காநல்லூர், பட்டு, கொத்தகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த பாலத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்தப் பாலம் ெரயில்வே கீழ்பாலம் ஆக இருப்பதால் சுரங்கப்பாதை போல் காணப்படுகிறது மழைக்காலங்களில் இந்த ெரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மோட்டார்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு அந்த தண்ணீர் வெளியேற்றி அருகில் உள்ள கிணற்றில் விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மேல்ஆலத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை பெய்தது அதனால் ெரயில்வே பாலத்திற்கு கீழே சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
அதனால் இந்தப் பாலத்தின் வழியாக செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள் வாகனங்களில் தண்ணீர் புகுந்துவிட்டதால் மிகவும் சிரமப்பட்டு பாலத்தை கடந்து செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் நீரை வெளியேற்றும் மோட்டார் மூலம் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தண்ணீர் வெளியேற்ற வெளியேற்ற மீண்டும் ஊற்றுக்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலத்தில் தண்ணீர் தேங்கிய சமயத்தில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான முறையில் ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்