search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 2700 இடங்களில் தடுப்பூசி முகாம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 2700 இடங்களில் தடுப்பூசி முகாம்

    • நாளை காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை 2700க்கும் ேமற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
    • பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 19,36,702 பேர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 18,58,395 பேர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 2,25,676 பேர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை 2.2 லட்சம் நபர்கள் 2-ம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்தும் செலுத்தாமல் உள்ளனர். இதற்காக தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாளை காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை 2700க்கும் ேமற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×