search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது குடிக்க வற்புறுத்திய வாலிபர் கைது
    X

    மது குடிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

    • மது குடிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்

    கரூர்

    கரூர் காந்திகிராமம் இந்திராநகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 16). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மனோஜ் தனது நண்பர் தீபன்ராஜ் என்பவருடன் போக்குவரத்து நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த பிரஜோல் (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரையும் மது குடிக்க வற்புறுத்தி மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனோஜ், தீபன்ராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் வழக்குப்பதிந்து, பிரஜோலை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×