என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணி முடிந்தும் திறக்கப்படாத பள்ளி கட்டிடம்
- ஒராண்டுக்கு மேலாகியும் புதிய கட்டிம் திறக்கப்படாமல் பூட்டிய நிலையிலேயே இருப்பதால் கட்டிடத்தின் வெளிப்புறத்திலேயே மாணவர்கள் அமர வைக்கப்பட்டு ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படுகிறது.
- புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்படாமலேயே பாழடைந்து பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
திருவையாறு:
திருவையாறு அருகே குழிமாத்தூர் ஊராட்சி அந்தளி குக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளி கூடத்தின் பழைய கட்டிடம் பாழடைந்ததை முன்னிட்டு முழுவதும் இடிக்கப்பட்டு கடந்த 2018 -2019 ஆம் நிதி ஆண்டு ரூ.16.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.ஆனால், கடந்த ஒராண்டுக்கு மேலாகியும் புதிய கட்டிம் திறக்கப்படாமல் பூட்டிய நிலையிலேயே இருப்பதால், கட்டிடத்தின் வெளிப்புறத்திலேயே, வெயில், மழை இயற்கை இடர்பாடுகளுடன் மாணவ ர்கள் அமர வைக்கப்பட்டு ஆசிரிய ர்களால் பாடம் நடத்தப்ப டுகிறது.
இந்தப் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்படா மலேயே பாழடைந்து பொருளா தார நஷ்டத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. எனவே, அந்தளி குக்கிராமத்தின் புதிய பள்ளிக் கட்டிடத்தை உடனடியாக திறந்து, மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து பாடம் கற்றிட ஆவன செய்து உதவுமாறு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரி களிடம் கோரிக்கை விடு த்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்