என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் கணவருடன் சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி
Byமாலை மலர்10 Aug 2022 8:53 AM GMT
- தூத்துக்குடி பூபாலராய புரம் அருகே உள்ள சாமு வேல்புரத்தை சேர்ந்தவர் யோனாஸ். மீனவர். இவரது மனைவி சகாயதனியா (வயது24)
- நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக கணவன், மனைவி ஆகியோர் சென்ற போது வேகத்தடையில் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபாலராய புரம் அருகே உள்ள சாமு வேல்புரத்தை சேர்ந்தவர் யோனாஸ். மீனவர்.
மோட்டார் சைக்கிள் விபத்து
இவரது மனைவி சகாயதனியா (வயது24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று மாலை பொரு ட்கள் வாங்குவதற்காக கணவன், மனைவி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். குரூஸ்புரம் அருகே சென்ற போது அங்குள்ள வேகத்தடையில் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இளம்பெண் பலி
இதில் தூக்கிவீசப்பட்ட சகாயதனியா பலத்த காய மடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சேர்ந்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபிசுஜின் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X