search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் லாரியில் மணல் கடத்தல் - டிரைவர் கைது
    X

    திருச்சியில் லாரியில் மணல் கடத்தல் - டிரைவர் கைது

    • துறையூர் அருகே திருச்சி மண்டல கனிமவளத்துறை பறக்கும் படை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
    • சரவணன் லாரியில் மண்னை அரசின் உரிய அனுமதி இன்றி கடத்தி செல்வது தெரிய வந்தது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிழக்குவாடி பகுதியில் திருச்சி மண்டல கனிமவளத்துறை பறக்கும் படை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (33) என்பதும், அவர் லாரியில் கப்பி மண்னை அரசின் உரிய அனுமதி இன்றி கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதனையடுத்து பறக்கும் படையினர் லாரியை பறிமுதல் செய்து, துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சரவணை கைது செய்தனர்.

    மேலும் லாரியின் உரிமையாளர், குவாரியின் உரிமையாளர் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×