search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது - கார் பறிமுதல்
    X

    துறையூரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது - கார் பறிமுதல்

    • முசிறி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் தனிப்படை போலீசார் துறையூர் பாலக்கரை அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
    • காரின் மறைவான பகுதியில் சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி கடத்திக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.

    இதனைத் தொடர்ந்து திருச்சி மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசு தலைமையில், முசிறி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் தனிப்படை போலீசார் துறையூர் பாலக்கரை அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வேகமாக வந்த கார் ஒன்றினை நிறுத்தி, சோதனை செய்ததில் காரின் மறைவான பகுதியில் சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி கடத்திக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து காரினை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பச்சபெருமாள் பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (28) என்பது தெரிய வந்ததையடுத்து, தனிப்படையினர் அருண்குமாரை துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அருண்குமாரை கைது செய்ததோடு, கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரினையும் பறிமுதல் செய்தார்.

    Next Story
    ×