search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது போதையில் கீழே விழுந்த தொழிலாளி சாவு
    X

    மது போதையில் கீழே விழுந்த தொழிலாளி சாவு

    • மது போதையில் கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்
    • சகோதரி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார்

    திருச்சி:

    திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60) . கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆன மூன்று மாதத்தில் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை அடுத்து மதுவுக்கு அடிமையானார். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு இவர் மது போதையில் ஜங்ஷனில் உள்ள ரயில்வே திருமண மண்டபம் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லோகநாதனின் சகோதரி ராஜலட்சுமி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×