search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வியாபாரிகள் கடையடைப்பு
    X

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வியாபாரிகள் கடையடைப்பு

    • இந்த கடையில் மது வாங்கி குடிப்பவர்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கேலிக் கிண்டல் செய்து வந்தனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து, சுல்தானியப்பா சந்து உள்ளது.

    இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.

    இந்த கடையில் மது வாங்கி குடிப்பவர்கள் அந்த வழியாக செல்லும் பொது மக்களை கேலிக் கிண்டல் செய்து வந்தனர்.

    இதனால் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் அவதி அடைந்தனர்.

    இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் இன்று வணிகர் சங்க நிர்வாகி வாசு, தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×