search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா- நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா- நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாள் அன்று ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • 4-ம் திருநாளில் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெற உள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாள் அன்று ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனை–யாட்டி நாளை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுவாமி நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம் தொடங்குகிறது.

    விழாவானது 11 நாட்கள் நடைபெற உள்ளது. 4-ம் திருநாளான 29-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெற உள்ளது.

    மேலும் வருகிற 3-ந்தேதி கரூர் சித்தர் மானூரில் எழுந்தருள தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வருகிறார்.

    பின்பு சங்கரன் கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவான சுவாமி கோவிலை அடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×