search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனையூர் செட்டிகுளத்தில் இன்று மாலை  மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - அண்ணாமலை பங்கேற்பு
    X

    பனையூர் செட்டிகுளத்தில் இன்று மாலை மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - அண்ணாமலை பங்கேற்பு

    • குவாரி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துகிறார்
    • மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் குறித்து பேசுகிறார்.

    நெல்லை:

    மத்திய அரசின் 8-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பனையூர் செட்டிகுளத்தில் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.

    அதற்காக அவர் இன்று பிற்பகல் விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வரும்அவர் அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தில் பலியான நாங்குநேரி அருகே உள்ள இளையார்குளம் செல்வம் வீட்டிற்கு செல்கிறார்.

    அங்கு விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

    கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில செயலாளர் வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலபதி என்ற குட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பின்னர் அங்கிருந்து பனையூர் செட்டிகுளத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் குறித்து பேசுகிறார். அதனை முடித்து கொண்டு இரவில் நெல்லை தனியார் விடுதியில் தங்கும் அவர் நாளை காலை தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    Next Story
    ×